search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ரஷியாவில் சோகம் - அடுக்குமாடி குடியிருப்பில் கியாஸ் கசிவால் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 7 பேர் பலி
    X

    வெடிவிபத்து

    ரஷியாவில் சோகம் - அடுக்குமாடி குடியிருப்பில் கியாஸ் கசிவால் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 7 பேர் பலி

    • ரஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் கியாஸ் கசிவால் வெடிவிபத்து ஏற்பட்டது.
    • இதில் சிக்கி பச்சிளம் குழந்தை உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மாஸ்கோ:

    ரஷியாவின் தன்னாட்சி பெற்ற பிராந்தியமான செர்பியாவில் உள்ள நோவோசிபிர்ஸ்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு பல குடும்பங்கள் வசித்து வந்தன.

    இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் கியாஸ் கசிவு ஏற்பட்டது. அதை தொடர்ந்து அங்கு பயங்கர வெடி விபத்து நேரிட்டது. இதில் அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கினர்.

    இந்த விபத்தில் 2 வயது பச்சிளம் குழந்தை உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடம் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    கடந்த 7-ம் தேதி தலைநகர் மாஸ்கோ அருகிலுள்ள யெப்ரெமோவ் நகரில் கியாஸ் கசிவால் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×