என் மலர்tooltip icon

    உலகம்

    பாதுகாப்புத்துறை மந்திரிகள் மாநாடு: சீனா சென்றடைந்தார் ராஜ்நாத் சிங்
    X

    பாதுகாப்புத்துறை மந்திரிகள் மாநாடு: சீனா சென்றடைந்தார் ராஜ்நாத் சிங்

    • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் மாநாடு சீனாவில் நடைபெறுகிறது.
    • இதில் பங்கேற்க இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சீனா சென்றுள்ளார்.

    பீஜிங்:

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

    இதற்கிடையே, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் மாநாடு சீனாவில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்க இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சீனா சென்றுள்ளார்.

    சீனாவின் சாண்டோங் மாகாணம் குயிங்தவோ நகரத்திற்கு விமானத்தில் சென்ற ராஜ்நாத் சிங்கை சீன அதிகாரிகள், இந்திய அதிகாரிகள் வரவேற்றனர்.

    சீனா சென்றுள்ள ராஜ்நாத் சிங் பாதுகாப்புத்துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்கிறார்.

    Next Story
    ×