என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
பாகிஸ்தான் பாராளுமன்ற இடைத்தேர்தல்: இம்ரான் கான் 9 தொகுதிகளில் போட்டி
- இம்ரான்கான் போட்டியிடப்போவதாக அறிவித்திருப்பது, பலரையும் திடுக்கிட வைத்துள்ளது.
- அடுத்த மாதம் 25-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத் :
பாகிஸ்தானில் இம்ரான்கான் ஆட்சி வீழ்த்தப்பட்டபோது, அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் 131 எம்.பி.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள். அவர்களில் 11 பேரது ராஜினாமாவை பாராளுமன்ற சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்த 11 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 25-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 2 தொகுதிகள் பெண்களுக்கானவை.
9 தொகுதிகளில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் சார்பில் கட்சித்தலைவர் இம்ரான்கான் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அந்தக் கட்சியின் துணைத்தலைவர் பவாத் சவுத்ரி உறுதி செய்தார்.
9 தொகுதிகளில் இம்ரான்கான் போட்டியிடப்போவதாக அறிவித்திருப்பது, பலரையும் திடுக்கிட வைத்துள்ளது. இது பற்றி அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கையில், "9 தொகுதிகளில் பொருத்தமான வேட்பாளர் கிடைக்கவில்லையா?" என்று கேள்வி எழுப்பினர்.
2018 பொதுத்தேர்தலில் இம்ரான்கான், 5 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி பெற்றார் என்பது நினைவுகூரத்தக்கது.
இப்படி பல தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறுவதின் மூலம் அரசியல் கட்சித்தலைவர்கள் தங்கள் பிரபலத்தை நிரூபித்துக்காட்ட முயற்சிக்கிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்