என் மலர்
உலகம்

மொராக்கோவில் கனமழை: பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு
- லூக்கோஸ் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து, அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டது.
- சிடி ஸ்லிமானே மாகாணத்தின் கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
மொராக்கோ:
மொராக்கோவில் கடந்த சில வாரமாக கனமழை மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அங்கு பெய்த கனமழையால் கசார், எல்கெபிர் நகரம் வெள்ளத்தில் மூழ்கியது.
லூக்கோஸ் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து, அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. சிடி ஸ்லிமானே மாகாணத்தின் கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
சார், எல்-கெபிர் நகரில் மட்டும் சுமார் 50,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். 7 ஆண்டு வறட்சிக்குப் பிறகு பெய்துள்ள இந்த கனமழையால் அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன.
Next Story






