search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    உக்ரைனின் மிகப்பெரிய மின்சார உற்பத்தி நிலையம் மீது ரஷியா தாக்குதல்
    X

    உக்ரைனின் மிகப்பெரிய மின்சார உற்பத்தி நிலையம் மீது ரஷியா தாக்குதல்

    • சுமார் 3 மில்லியன் நுகர்வோருக்கு மின்சாரம் வழங்கி வந்தது.
    • பெரிய அளிவலான தாக்குதல் எங்களுடைய எரிசக்தி துறையை மோசமாக பாதித்துள்ளதாக உக்ரைன் எரிசக்தி துறை மந்திரி தெரிவி்துள்ளார்.

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படவில்லை. சில நாடுகள் அமைதி பேச்சுவார்த்தைக்கு முன்வந்தன. இருந்த போதிலும் அவை அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது. தற்போது சுவிட்சர்லாந்து அமைதி பேச்சுவார்த்தை முயற்சியை கையில் எடுத்துள்ளது.

    தற்போது இரு நாடுகளும் மாறிமாறி கட்டமைப்புகளை குறிவைத்து டிரோன் தாக்குதல், ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றன. அந்த வகையில் உக்ரைனின் தலைநகர் கீவ், செர்காசி, ஜைடோமிர் மாகாணங்களுக்கு மின்சாரம் வழங்கி வந்த டிரைபில்ஸ்கா என்ற மிகப்பெரிய மின்சார உற்பத்தி நிலையத்தை ரஷியா தாக்குதல் நடத்தி அழித்துள்ளது.

    மின்சார உற்பத்தி நிலையம் எரிந்து ஒரு குறிப்பிட்ட தூரம் வரை புகை மூட்டமாக காட்சி அளித்ததாகவும், அது பயங்கரமானது எனவும் ஆலையை நிர்வகிக்கும் வாரியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

    ரஷியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு பதிலடியாக உக்ரைன் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மாஸ்கோ தெரிவித்துள்ளது.

    டிரைபில்ஸ்கா உற்பத்தி நிலையம் சுமார் 3 மில்லியன் நுகர்வோருக்கு மின்சாரம் வழங்கி வந்தது. இந்த வருடத்தில் இருந்து இதன் தேவை சற்று குறைவாக என்பதால் மிகப்பெரிய பாதிப்பு இருக்காது எனத் தெரிவிக்கப்படுகிறது.

    ஆனால் வரவிருக்கும் கோடைக்காலத்தின்போது ஏசி பயன்படுத்தப்படும் என்பதால் அதிக மின்சார தேவை ஏற்படும். அப்போது பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    கார்கிவில் உள்ள எரிபொருள் கட்டமைப்பு மீது 10-க்கும் மேற்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த மாகாணத்தில் 2 லட்சம் மக்களுக்கு மேல் வசித்து வருவதாகவும், தொடர்ந்து அவர்கள் மின்சாரம் இல்லாமல் அவதிப்படுவதாகவும் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.

    பெரிய அளிவலான தாக்குதல் எங்களுடைய எரிசக்தி துறையை மோசமாக பாதித்துள்ளதாக உக்ரைன் எரிசக்தி துறை மந்திரி தெரிவி்துள்ளார்.

    2022-ம் ஆண்டு போர் தொடுத்ததில் இருந்து ரஷியா இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த மாதம் உக்ரைனின் எரிசக்தி தொடர்பான கட்டமைப்புகள் மீது அதிக அளவில் தாக்குதல் நடத்தியது. இதனால் நாட்டின் பாதி அளவிலான பகுதிகள் இருளில் மூழ்கியது.

    இந்த தாக்குதல் பாதுகாப்பதற்காகவும், எனர்ஜி சொத்துகளை பாதுகாப்பதற்கும் உக்ரைன் நாட்டிற்கான எச்சரிக்கை எனக் கருதப்படுகிறது. மேலும், உடனடியாக அவற்றை சரி செய்வதற்கான பரிசோனை எனவும் கூறப்படுகிறது.

    இதுபோன்ற வான் தாக்குதலை சமாளிக்க அதிகப்படியான வான் பாதுகாப்பு சிஸ்டம் தேவை என அதிகாரிகள் கேட்டு வரும் நிலையில், மெதுவாகத்தான் உக்ரைனுக்கு சப்ளை செய்யப்படுவதாக கூறப்படுவதாக தெரிகிறது.

    Next Story
    ×