search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    மத்திய மந்திரி எல்.முருகன், இலங்கை அதிபருடன் சந்திப்பு: திருக்குறள் புத்தகத்தை பரிசாக வழங்கினார்
    X

    மத்திய மந்திரி எல்.முருகன், இலங்கை அதிபருடன் சந்திப்பு: திருக்குறள் புத்தகத்தை பரிசாக வழங்கினார்

    • மந்திரி எல்.முருகன் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • யாழ்ப்பாணம் கலாசார மையத்தை திறந்து வைத்தார்.

    கொழும்பு :

    மத்திய மீன்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

    இதில் முக்கியமாக, மத்திய அரசின் நிதி உதவியின் கீழ் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள யாழ்ப்பாணம் கலாசார மையத்தை நேற்று அவர் திறந்து வைத்தார்.

    இதில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் மந்திரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இலங்கையின் வளமான மற்றும் பலதரப்பட்ட கலாசாரத்தை பறைசாற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    நிகழ்ச்சியில் பேசிய ரணில் விக்ரமசிங்கே, கலாசார மையத்தை கட்டுவதற்கு உதவியதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார். கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி இலங்கை சென்றபோது இந்த மையத்துக்கு அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவை, எல்.முருகன் சந்தித்து பேசினார். அப்போது இந்தியா-இலங்கை நல்லுறவு குறித்து அவர்கள் ஆலோசித்தனர். இந்த சந்திப்பின்போது இலங்கை அதிபருக்கு திருக்குறள் புத்தகத்தை எல்.முருகன் பரிசாக வழங்கினார்.

    Next Story
    ×