என் மலர்
உலகம்

இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
- இஸ்ரேல் படைகள் காசாவில் ஹமாஸ் அமைப்பினருடன் சண்டையிட்டு வருகின்றன.
- ஹமாஸ் காசா தலைவரை கண்டுபிடித்து ஒழித்துக் கட்டுவோம் என்று இஸ்ரேல் தெரிவித்தது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
இருதரப்பிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி யோவ் கேலன்ட் கடந்த இரு தினங்களில் வடக்கு எல்லை மற்றும் தெற்கில் சுற்றுப்பயணம் செய்தார்.
அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இஸ்ரேலியப் படைகள் காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளுடன் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளன. ஹமாஸ் காசா தலைவரை கண்டுபிடித்து ஒழித்துக் கட்டுவோம் என்று தெரிவித்தார்.
Live Updates
- 13 Oct 2023 1:56 PM IST
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் இன்று இஸ்ரேல் வந்துள்ளார். அவர் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்திக்க உள்ளார்.
- 13 Oct 2023 1:30 PM IST
இஸ்ரேல் நாட்டில் சிக்கித் தவித்த 14 தமிழர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வரவேற்றார்.
- 13 Oct 2023 12:11 PM IST
அடுத்த 24 மணி நேரத்தில் துரிதமாக வெளியேற வேண்டும் என்ற இஸ்ரேலின் எச்சரிக்கையை தொடர்ந்து, வட காசாவில் உள்ள 10 லட்சம் மக்கள் எங்கு செல்வதென தெரியாமல் பரிதவித்து வருகின்றனர்.
- 13 Oct 2023 10:41 AM IST
வட காசாவில் உள்ள 10 லட்சம் மக்கள் அடுத்த 24 மணி நேரத்தில் துரிதமாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- 13 Oct 2023 9:18 AM IST
காசா நகரத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை அனுப்பவேண்டும் என உலகளாவிய நிவாரண அமைப்புகளிடம் ஹமாஸ் அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
- 13 Oct 2023 8:33 AM IST
அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் நேற்று இஸ்ரேல் சென்றார். தலைநகர் டெல் அவிவில் உள்ள ராணுவ அமைச்சகத்தில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்தார். இஸ்ரேலுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என கூறினார்.
- 13 Oct 2023 7:18 AM IST
ஹமாஸ் அமைப்பு முழுதும் ஒழிக்கப்படும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உறுதிபட தெரிவித்துள்ளார்.
- 13 Oct 2023 6:37 AM IST
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்து நேபாளம், தனது 253 மாணவர்களை விமானம் மூலம் அழைத்து வந்தது. விமானத்தில் பயணித்த மாணவர்களை வெளியுறவு மந்திரி என்.பி.சவத் வரவேற்றார்.
- 13 Oct 2023 6:28 AM IST
இஸ்ரேல் நாட்டில் சிக்கித் தவித்த 212 இந்தியர்களுடன் தனி விமானம் இன்று காலை இந்தியா வந்தடைந்துள்ளது. அவர்களை மத்திய மந்திரி ராஜிவ் சந்திரசேகர் வரவேற்றார் என மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
- 12 Oct 2023 9:26 PM IST
இஸ்ரேல் நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் தனி விமானம் மூலம் நாளை காலை இந்தியா வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.







