என் மலர்
உலகம்

காசாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் - 46 பேர் பலி.. பட்டினியால் 154 பேர் பலி
- பட்டினியால் இறந்தவர்கள் எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது
- பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டுமென பிரான்ஸ் உள்ளிட்ட 15 மேற்குலக நாடுகள் வலியுறுத்தி கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 46 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் 30க்கும் மேற்பட்டோர் உணவு தேடி வந்தவர்கள் என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு முதல் இன்று காலை வரை காசாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் வான்வழி மற்றும் ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளது.
வடக்கு நகரமான கஸ்னியில் உள்ள சிக்கிம் கிராசிங்கில் உதவி வாகனங்களுக்காக காத்திருந்த கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்து.
ஜபாலியா அகதிகள் முகாம் மற்றும் வடக்கு நகரங்களான பெய்ட் லாஹியா மற்றும் பெய்ட் ஹனூனில் நடந்த தாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
தெற்கு நகரமான கான் யூனிஸில் உதவி வாகனங்கள் காத்திருக்கும்போது, செவ்வாய்க்கிழமை மாலை கொல்லப்பட்ட 16 பேரின் உடல்கள் வந்து சேர்ந்ததாக நாசர் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று (புதன்கிழமை) நுசைரத் நகரில் உள்ள உதவி விநியோக மையத்திற்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையில், காசாவில் மேலும் ஏழு பேர் பட்டினியால் இறந்தனர். இதனால் பட்டினியால் இறந்தவர்கள் எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது.
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டுமென பிரான்ஸ் உள்ளிட்ட 15 மேற்குலக நாடுகள் வலியுறுத்தி கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளாவிட்டால், செப்டம்பரில் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக பிரிட்டன் நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.






