search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஈரான் குண்டுவெடிப்பு - இந்தியா கடும் கண்டனம்
    X

    ஈரான் குண்டுவெடிப்பு - இந்தியா கடும் கண்டனம்

    • ஈரானில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் அரங்கேறின.
    • குண்டுவெடிப்பில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு.

    ஈரானின் கெர்மான் பகுதியில் உள்ள முன்னாள் தளபதி சுலைமானின் கல்லறை அருகே அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. நேற்று நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிக்கி நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறது.

    இது தொடர்பாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.


    அதில், "ஈரானின் கெர்மன் நகரில் ஏற்பட்ட கொடூரமான குண்டுவெடிப்பு சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியடைந்தோம். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது."

    "இந்த கடினமான சூழ்நிலையில், ஈரான் அரசு மற்றும் பொது மக்களிடம் எங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம். எங்களின் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் காயமுற்றோர் மற்றும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தாருடனேயே உள்ளது," என குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×