என் மலர்tooltip icon

    உலகம்

    வெனிசுலா தலைநகரில் பயங்கர குண்டுவெடிப்பு- அமெரிக்கா தாக்குதல்?
    X

    வெனிசுலா தலைநகரில் பயங்கர குண்டுவெடிப்பு- அமெரிக்கா தாக்குதல்?

    • வெனிசுலாவை சுற்றி கரீபியன் கடல்பகுதியில் அமெரிக்கா தனது படைகளை குவித்துள்ளது.
    • வெனிசுலா அதிபர் பதவியில் இருந்து மதுரோ வெளியேற வேண்டும் என்று டிரம்ப் நேரடியாக எச்சரிக்கை விடுத்தார்.

    வெனிசுலா தலைநகர் கராகசின் பல பகுதிகளில் இன்று அதிகாலை பலத்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தன. குண்டுகள் வெடித்ததில் அங்கு தீ பிழம்பு ஏற்பட்டு கரும்புகை எழும்பியது. மேலும் தலைநகரின் பல இடங்களில் விமானங்கள் தாழ்வாக பறந்து சென்றன. வெடிப்பு சத்தங்களை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர். தலைநகர் கராகசில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இதை நடத்தியது யார் என்பது குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. ஆனால் சமீபகாலமாக அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் வெனிசுலா மீது தாக்குதல் நடந்துள்ளது.

    வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார். இதையடுத்து வெனிசுலா படகுகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. வெனிசுலாவை சுற்றி கரீபியன் கடல்பகுதியில் அமெரிக்கா தனது படைகளை குவித்துள்ளது.

    வெனிசுலா அதிபர் பதவியில் இருந்து மதுரோ வெளியேற வேண்டும் என்று டிரம்ப் நேரடியாக எச்சரிக்கை விடுத்தார். மேலும் வெனிசுலாவில் தரைவழித் தாக்குதல் நடத்தப்படலாம் என்று டிரம்ப் கூறி இருந்தார். இந்த நிலையில்தான் வெனிசுலாவில் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×