என் மலர்tooltip icon

    உலகம்

    இந்தோனேசியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 6.2 ரிக்டர் அளவில் பதிவு
    X

    இந்தோனேசியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 6.2 ரிக்டர் அளவில் பதிவு

    • இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் நேற்று நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் மையம் கொண்டிருந்தது என தேசிய புவியியல் ஆய்வுமையம் தெரிவித்தது.

    ஜகார்த்தா:

    பரந்த தீவுக்கூட்டமான இந்தோனேசியா பசிபிக் படுகையில் உள்ள எரிமலைகளின் வளைவான ரிங் ஆப் பயர் மீது இருப்பதால் அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்பட்டு வருகிறது.

    இந்தோனேசியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். அந்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஆச்சே மாகாணத்தில் நேற்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

    இந்நிலையில், இன்று அதிகாலை இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு வடக்குப் பகுதியில் உள்ள பப்புவா மாகாணத்தின் தலைநகரான ஜெயபுராவில் உள்ள அபேபுராவிற்கு வடகிழக்கே 162 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.5-ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

    இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் குலுங்கின. இதனால் தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர். அவர்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. ஆனால் அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்று இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்ப நிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் எச்சரித்துள்ளது.

    சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல்கள் வெளியாகவில்லை. அடுத்தடுத்து ஏற்பட்ட நில நடுக்கங்களால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    கடந்த 2004-ம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி இந்தியா உள்பட பல நாடுகளை தாக்கியது.இதில் 2.30 லட்சம் பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடதக்கது.

    Next Story
    ×