என் மலர்tooltip icon

    உலகம்

    காசாவில் வான்தாக்குதல், துப்பாக்கிச்சூட்டில் 82 பாலஸ்தீனர்கள் பலி
    X

    காசாவில் வான்தாக்குதல், துப்பாக்கிச்சூட்டில் 82 பாலஸ்தீனர்கள் பலி

    • இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர்.
    • உதவிபொருட்கள் வாங்க நின்ற பாலஸ்தீனர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதால் 38 பேர் உயிரிழப்பு.

    இஸ்ரேல்- காசா இடையே விரைவில் போர் நிறுத்தம் ஏற்படும் என அமெரிக்க அதிபர் தெரிவித்திருந்தார். என்ற போதிலும் இஸ்ரேல் வான் தாக்குதலை நிறுத்தவில்லை. நேற்றிரவு காசாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர்.

    தற்போது பட்டினியால் தவித்து வரும் பாலஸ்தீனர்கள் உதவிப்பொருட்களுக்களுக்கான காத்திருந்து வருகின்றனர். அவர்களுக்கு உதவி பொருட்கள் வழங்க லாரிகள் மூலம் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த லாரிகளில் வரும் உதவிப்பொருட்களை பெறுவதற்கு பாலஸ்தீன மக்கள் முண்டியத்துச் செல்லும் பரிதாப நிலை ஏற்படுகிறது.

    அவ்வாறு முண்டியடித்துச் செல்லும் பட்டினியால் தவிக்கும் அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்துகிறது. அவ்வாறு காசாவில் பல்வேறு இடங்களில் உதவிப் பொருட்கள் வாங்கும் இடத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 38 உயிரிழந்தனர்.

    Next Story
    ×