search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    நைஜீரியாவில் சோகம் - பயணிகள் பஸ் மீது ரெயில் மோதி 6 பேர் பலி
    X

    நைஜீரியாவில் சோகம் - பயணிகள் பஸ் மீது ரெயில் மோதி 6 பேர் பலி

    • நைஜீரியாவின் லாகோஸ் பகுதியில் பயணிகள் பஸ் மீது ரெயில் மோதியது.
    • இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.

    லாகோஸ்:

    நைஜீரியா நாட்டின் லாகோஸ் நகரில் பயணிகள் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. ரெயில் வருவதற்குள் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது பயணிகள் பஸ் மீது ரெயில் வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் பஸ் பயணிகள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து விசாரணையும் தொடங்கி உள்ளது.

    ரெயில் பயணிகள் யாரும் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காயமடையவில்லை. பஸிசில் இருந்து 80-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×