search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அந்தமான் நிக்கோபார் தீவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு
    X

    அந்தமான் நிக்கோபார் தீவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு

    • தீவில் இன்று அதிகாலை 4.17 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
    • உயிர் சேதம் அல்லது பொருட்சேதம் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை.

    அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதிகாலை 4.17 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், நிலநடுக்கத்தின் ஆழம் 61 கி.மீட்டர் என்றும் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால், உயிர் சேதம் அல்லது பொருட்சேதம் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

    கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி நள்ளிரவு 12.53 மணிக்கு அந்தமான்- நிகோபார் போர்ட் பிளேயரில் இருந்து 126 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தென் மேற்கு பகுதியில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×