என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பை உருவாக்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது- பிரதமர் மோடி பேச்சு
Byமாலை மலர்4 May 2022 6:07 PM GMT (Updated: 4 May 2022 6:07 PM GMT)
எந்த ஒரு உள்கட்டமைப்பு வளர்ச்சியும் மக்களை மையமாக கொண்டே இருக்க வேண்டும் என்றும், அதை தான் இந்தியாவில் நாங்கள் செய்கிறோம் என்றும், சர்வதேச மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்தார்.
டென்மார்க்:
பேரிடரை எதிர்கொள்ளும் உள்கட்டமைப்புக்கான சர்வதேச நான்காவது மாநாட்டு காணொலி மூலம் நடைபெற்றது.
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், கானா அதிபர் நானா அட்டோ டன்க்வா அகுஃபோ அட்டோ, ஜப்பான் பிரதமர் ஃப்யூமியோ கிஷிடா மற்றும் மடகாஸ்கர் அதிபர் ஆண்ட்ரி நாரினா ரஜோலினா உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி மூலம் உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:
மக்கள் சார்ந்த உயர்தரமான, நம்பகத்தன்மையான, நிலையான சேவைகளை, நடுநிலை வழியில் வழங்குவதும்தான் உள்கட்டமைப்பு மேம்பாடு.
ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அவர்களது விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பை உருவாக்குவதில் நாங்கள் தொடர்ந்து உறுதியாக உள்ளோம்.
எந்த ஒரு உள்கட்டமைப்பு வளர்ச்சிப் பயணத்திலும் மக்கள்தான் மையமாக இருக்கவேண்டும். அதை தான் இந்தியாவில் நாங்கள் செய்கிறோம்.
உள்கட்டமைப்பை நெகிழ்திறன் வாய்ந்ததாக நாம் மாற்றினால், நமக்காக மட்டுமல்லாமல், பல எதிர்கால தலைமுறையினருக்கும் பேரிடர்களை தடுக்க முடியும். உள்கட்டமைப்புகளுக்கு ஏற்படும் பாதிப்பு, பல தலைமுறைகளையும் பாதிக்கும்.
கல்வி, சுகாதாரம், குடிநீர், துப்புரவு, மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட ஏராளமான துறைகளில் அடிப்படை சேவை வசதிகளை இந்தியா அதிகரித்து வருவதால், பருவநிலை மாற்றத்தையும் மிக நேரடியான வழியில் நாங்கள் எதிர்கொள்கிறோம்.
இவ்வாறு பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்...மே 16ல் பிரமாண்ட பொதுக்கூட்டம்... ராஜஸ்தானில் சோனியா, ராகுல் உரையாற்றுகிறார்கள்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X