என் மலர்tooltip icon

    உலகம்

    விபத்துக்குள்ளான விமானம்
    X
    விபத்துக்குள்ளான விமானம்

    பெரு நாட்டில் விமான விபத்து - 7 பேர் உயிரிழப்பு

    இறந்தவர்களில் 5 பேர் சிலி மற்றும் நெதர்லாந்து நாட்டு சுற்றுலாப் பயணிகள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
    நாஸ்கா:

    பெரு நாட்டின் நாஸ்கா நகரில் உள்ள மரியா ரீச் விமான நிலையத்தில் இருந்து செஸ்னா 207 இலகு ரக விமானம் புறப்பட்டு சென்றுள்ளது.  அதில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த 3 சுற்றுலாவாசிகள், சிலி நாட்டை சேர்ந்த 2 சுற்றுலாப் பயணிகள் மற்றும் பெரு நாட்டை சேர்ந்த 2 விமானிகள் இருந்தனர். 

    தொல்பொருள் தளத்திற்கு மேலே பறந்த போது அந்த விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்து ஏழு பேரும் உயிரிழந்தனர்.  விமானம் தரையில் மோதிய பிறகு தீப்பிடித்ததாக நாஸ்கா காவல்துறை தலைவர் கமாண்டர் எட்கர் எஸ்பினோசா தெரிவித்துள்ளார். 


    Next Story
    ×