என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
லாகூர் அனார்கலி சந்தையில் பயங்கர குண்டுவெடிப்பு - 3 பேர் உயிரிழப்பு
Byமாலை மலர்20 Jan 2022 1:15 PM GMT (Updated: 20 Jan 2022 1:15 PM GMT)
குண்டுவெடிப்பால் அருகில் உள்ள கடைகள் மற்றும் கட்டிடங்களின் கண்ணாடிகள் உடைந்தன, சில மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்துள்ளன.
லாகூர்:
பாகிஸ்தானின் வணிக நகரமான லாகூரில் உள்ள பிரபல அனார்கலி சந்தையில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்தியப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் பான் மண்டி அருகே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த குண்டுவெடிப்பால் நிலத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. குண்டுவெடிப்பால் அருகில் உள்ள கடைகள் மற்றும் கட்டிடங்களின் கண்ணாடிகள் உடைந்தன. சில மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்துள்ளன. இந்த, வெடிகுண்டு தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
குண்டு வெடித்ததையடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். சந்தை மூடப்பட்டு, அந்தப் பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு சோதனை நடத்தப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X