என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலங்கையில் மழை, வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்வு
Byமாலை மலர்13 Nov 2021 5:59 PM GMT (Updated: 13 Nov 2021 5:59 PM GMT)
இலங்கையில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர்
கொழும்பு:
இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம்.
இந்த ஆண்டு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாக அங்கு தொடர்ச்சியாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இலங்கையில் மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வெள்ள நீர் வடிந்து வருவதால் பாதிப்பு அடைந்த பகுதிகள் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றன என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்...பேஸ்புக் பார்ப்பதை நிறுத்த தொழிலதிபர் செய்த காரியம்... வியப்படைந்த எலோன் மஸ்க்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X