search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணீஷ் சேத்தியின் கன்னத்தில் அறையும் ஊழியர்
    X
    மணீஷ் சேத்தியின் கன்னத்தில் அறையும் ஊழியர்

    பேஸ்புக் பார்ப்பதை நிறுத்த தொழிலதிபர் செய்த காரியம்... வியப்படைந்த எலோன் மஸ்க்

    காராவை வேலைக்கு அமர்த்தியது முதல், கம்பெனி வளர்ச்சி பெற்றது வரை சமூக வலைத்தளங்களில் அத்தனை செய்திகளும் தற்போது வைரலாகி கொண்டிருக்கின்றன.
    வாஷிங்டன்:

    இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர் மணீஷ் சேத்தி. 2012-ல் பாவ்லோக் என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். ஆனால் எதிர்பார்த்த லாபம் வரவில்லை. இதற்கு காரணம் அவர் நீண்ட நேரம் சமூக வலைதளமான பேஸ்புக்கில் செலவிட்டது.

    தன்னுடைய தொழிலை முன்னுக்கு கொண்டு வரவும், நிறைய லாபம் சம்பாதிக்கவும் ஒரு புது ஐடியாவை கையில் எடுத்தார். அதனால், இனிமேல் தேவையில்லாமல் பேஸ்புக் பார்க்கக் கூடாது என்று முடிவு செய்தார். ஆனாலும் அவரால் பேஸ்புக் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இதனால், ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்தினார். அவரது பெயர் காரா.

    சேத்தியை பேஸ்புக் பார்க்க விடாமல் தடுப்பதே காராவின் வேலை. அவர் சேத்தியின் அருகிலேயே உட்கார்ந்து சேத்தி எப்போதெல்லாம் பேஸ்புக் பக்கம் போகிறாரோ, அப்போதெல்லாம் சேத்தியின் கன்னத்தில் பளாரென ஒரு அறை விட வேண்டும். இதற்கு காராவுக்கு தரப்பட்ட சம்பளம், ஒரு மணி நேரத்திற்கு 8 டாலர்கள்.

    இப்போது காரா வந்த நேரம், சேத்தியின் கம்பெனி ஆஹா ஓஹோவென வளர்ந்து விட்டது. உற்பத்தியும் பெருகி விட்டது. அதாவது காரா வந்தபிறகு, அந்த நிறுவனத்தின் உற்பத்தி திறன் 98 சதவீதம் அதிகரித்துவிட்டது.

    காராவை வேலைக்கு அமர்த்தியது முதல், கம்பெனி வளர்ச்சி பெற்றது வரை சமூக வலைத்தளங்களில் அத்தனை செய்திகளும் தற்போது வைரலாகி கொண்டிருக்கின்றன. இதை பார்த்து சேத்திக்கு மிகுந்த மகிழ்ச்சியாகி விட்டது. உடனே அது சம்பந்தமாக ஒரு டுவீட்டையும் பதிவிட்டுள்ளார்.

    இதனிடையே, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க் அந்த டுவீட்டுக்கு "தீ"  எமோஜி போட்டுள்ளார். எலோன் மஸ்கின் அந்த ட்வீட்டை 10 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். 
    Next Story
    ×