என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கொரோனா வைரஸ்
இந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு கிடுகிடு உயர்வு
By
மாலை மலர்14 July 2021 7:57 PM GMT (Updated: 14 July 2021 7:57 PM GMT)

இந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மேலும் அந்த நாடு தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியாவை முந்தியுள்ளது.
ஜகார்த்தா:
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
அந்த வகையில் இந்தோனேசியாவில் இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 54 ஆயிரத்து 517 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் அங்கு கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்தை கடந்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 991 பேர் கொரோனாவால் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு 69 ஆயிரத்தை தாண்டியது.
தினசரி கொரோனா பாதிப்பில் இந்தோனேசியா இந்தியாவை முந்தி உள்ளது. இந்தியாவில் நேற்று 39 ஆயிரத்துக்கும் குறைவாகவே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் இந்தோனேசியா ஆசியாவின் கொரோனா பரவலாக பரவல் மையமாக (ஹாட்ஸ்பாட்) மாறியுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் இந்தோனேசியா அடுத்த இந்தியாவாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அதாவது, இந்தோனேசியாவில் வைரஸ் பரவல் இதே நிலையில் நீடித்தால், கொரோனா வைரஸ் 2-வது அலையால் இந்தியா சந்தித்த பேரழிவை இந்தோனேசியாவும் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் ஒரு மாதத்துக்கு முன்பு தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்துக்கும் குறைவாகவே இருந்து வந்தது. ஆனால் அது தற்போது கிட்டத்தட்ட 7 மடங்கு உயர்ந்துள்ளது.
அந்த நாட்டின் இரு மிகப்பெரும் தீவுகளான ஜாவா மற்றும் பாலி தீவுகளில் டெல்டா மாறுபாடு கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதே இந்த மோசமான சூழ்நிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
அதேபோல் கொரோனா தடுப்பூசி செலுத்துவதிலும் அந்த நாடு பின்தங்கியுள்ளது. போதுமான தடுப்பூசிகளை பெற அந்த நாட்டு அரசு போராடி வருகிறது.
மக்கள் தொகையின் அடிப்படையில் உலகின் 4-வது மிகப்பெரிய நாடாக விளங்கும் இந்தோனேசியாவில் மொத்த மக்கள் தொகையான 27 கோடி பேரில் வெறும் 1½ கோடி பேருக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்.... டெல்டா வைரசால் தொற்று பாதிப்பு கணிசமாக அதிகரிக்கும்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
