என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓமனில் அரசு, தனியார் பள்ளிக்கூடங்கள் நவம்பர் 1-ந் தேதி திறப்பு
Byமாலை மலர்12 Sep 2020 4:20 AM GMT (Updated: 12 Sep 2020 4:20 AM GMT)
ஓமனில் அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள் நவம்பர் 1-ந் தேதி திறக்கப்படும் என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
மஸ்கட்:
ஓமன் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஓமன் சுப்ரீம் கமிட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் ஓமனில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களையும் சுகாதார பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் வருகிற நவம்பர் மாதம் 1-ந் தேதி முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும்.
பள்ளிக்கூடங்களில் 3 முதல் அதிகபட்சமாக 5 மணி நேரம் மட்டுமே பாடவகுப்புகள் நடைபெறும். குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் உடைய பள்ளிக்கூடங்கள் 3 மணி நேரமும், அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கூடங்கள் 4 மணி நேரமும் செயல்படும்.
1-ம் வகுப்பு முதல் 4-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் முககவசங்களை அணிய தேவையில்லை. ஒருவேளை பெற்றோர்கள் பள்ளிக்கூடத்திற்கு தங்கள் பிள்ளைகளை அனுப்ப விருப்பமில்லை என்றால் ஆன்லைன் பாடவகுப்புகளை தேர்வு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. பள்ளிக்கூட பஸ்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சமூக இடைவெளி, கிருமி நாசினி நீக்க பணிகளுடன் வகுப்பறைகள் சுகாதாரமாக பராமரிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஓமன் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஓமன் சுப்ரீம் கமிட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் ஓமனில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களையும் சுகாதார பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் வருகிற நவம்பர் மாதம் 1-ந் தேதி முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும்.
பள்ளிக்கூடங்களில் 3 முதல் அதிகபட்சமாக 5 மணி நேரம் மட்டுமே பாடவகுப்புகள் நடைபெறும். குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் உடைய பள்ளிக்கூடங்கள் 3 மணி நேரமும், அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கூடங்கள் 4 மணி நேரமும் செயல்படும்.
1-ம் வகுப்பு முதல் 4-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் முககவசங்களை அணிய தேவையில்லை. ஒருவேளை பெற்றோர்கள் பள்ளிக்கூடத்திற்கு தங்கள் பிள்ளைகளை அனுப்ப விருப்பமில்லை என்றால் ஆன்லைன் பாடவகுப்புகளை தேர்வு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. பள்ளிக்கூட பஸ்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சமூக இடைவெளி, கிருமி நாசினி நீக்க பணிகளுடன் வகுப்பறைகள் சுகாதாரமாக பராமரிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X