என் மலர்
செய்திகள்

கோப்பு படம்
2 கோடியே 30 லட்சம் பேருக்கு கொரோனா - அப்டேட்ஸ்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 30 லட்சத்தை கடந்தது.
ஜெனீவா:
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்- பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 30 லட்சத்து 96 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா வேகமெடுத்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 68 ஆயிரத்து 898 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நேற்று 49 ஆயிரம் பேருக்கும், பிரேசிலில் 31 ஆயிரம் பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2 கோடியே 30 லட்சத்து 96 ஆயிரத்து 649 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 66 லட்சத்து 5 ஆயிரத்து 513 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 849 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 8 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா - 57,95,339
பிரேசில் - 35,36,488
இந்தியா - 29,05,824
ரஷியா - 9,46,976
தென் ஆப்பிரிக்கா - 6,03,338
பெரு - 5,67,059
மெக்சிகோ - 5,43,806
கொலம்பியா - 5,22,138
ஸ்பெயின் - 4,07,879
சிலி - 3,93,769
Next Story