search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பு உபகரணங்கள்
    X
    கொரோனா தடுப்பு உபகரணங்கள்

    50 நாடுகளுக்கு 400 கோடி முக கவசங்களை ஏற்றுமதி செய்துள்ளோம் - தரமற்றவை என்ற புகாருக்கு சீனா மறுப்பு

    வெளிநாடுகளின் தேவைக்காக சீனா 400 கோடி முக கவசங்களை ஏற்றுமதி செய்துள்ள நிலையில், சரியாக பயன்படுத்த தெரியாததால், தரம் குறித்து சந்தேகம் அவர்களுக்கு எழுந்துள்ளதாக சீன வர்த்தக அமைச்சக அதிகாரி மறுப்பு தெரிவித்துள்ளார்.
    பீஜிங்:

    சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், வெளிநாடுகளின் தேவைக்காக மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியை சீனா அதிகரித்துள்ளது. ஆனால், சீன உபகரணங்கள் தரமற்றவையாக இருப்பதாக நெதர்லாந்து, பிலிப்பைன்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகள் புகார் தெரிவித்துள்ளன. 6 லட்சம் முக கவசங்களை நெதர்லாந்து திருப்பி அனுப்பியது. ஆயிரக்கணக்கான சோதனை கருவிகளை ஸ்பெயின் நிராகரித்தது. இந்நிலையில், இதற்கு பதில் அளிக்கும் வகையில், சீன வர்த்தக அமைச்சக உயர் அதிகாரி ஜியாங் பேன் கூறியதாவது:-

    சீன தயாரிப்புகள் குறித்த புகார்கள், முழு உண்மையை பிரதிபலிக்கவில்லை. கடந்த மார்ச் 1-ந் தேதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 386 கோடி முக கவசங்கள், 3 கோடியே 75 லட்சம் கவச உடைகள், 16 ஆயிரம் செயற்கை சுவாச கருவிகள், 21 லட்சம் சோதனை கருவிகள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்துள்ளோம். சரியாக பயன்படுத்த தெரியாததால், தரம் குறித்து சந்தேகம் தெரிவிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×