என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
50 நாடுகளுக்கு 400 கோடி முக கவசங்களை ஏற்றுமதி செய்துள்ளோம் - தரமற்றவை என்ற புகாருக்கு சீனா மறுப்பு
Byமாலை மலர்6 April 2020 8:50 AM GMT (Updated: 6 April 2020 8:50 AM GMT)
வெளிநாடுகளின் தேவைக்காக சீனா 400 கோடி முக கவசங்களை ஏற்றுமதி செய்துள்ள நிலையில், சரியாக பயன்படுத்த தெரியாததால், தரம் குறித்து சந்தேகம் அவர்களுக்கு எழுந்துள்ளதாக சீன வர்த்தக அமைச்சக அதிகாரி மறுப்பு தெரிவித்துள்ளார்.
பீஜிங்:
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், வெளிநாடுகளின் தேவைக்காக மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியை சீனா அதிகரித்துள்ளது. ஆனால், சீன உபகரணங்கள் தரமற்றவையாக இருப்பதாக நெதர்லாந்து, பிலிப்பைன்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகள் புகார் தெரிவித்துள்ளன. 6 லட்சம் முக கவசங்களை நெதர்லாந்து திருப்பி அனுப்பியது. ஆயிரக்கணக்கான சோதனை கருவிகளை ஸ்பெயின் நிராகரித்தது. இந்நிலையில், இதற்கு பதில் அளிக்கும் வகையில், சீன வர்த்தக அமைச்சக உயர் அதிகாரி ஜியாங் பேன் கூறியதாவது:-
சீன தயாரிப்புகள் குறித்த புகார்கள், முழு உண்மையை பிரதிபலிக்கவில்லை. கடந்த மார்ச் 1-ந் தேதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 386 கோடி முக கவசங்கள், 3 கோடியே 75 லட்சம் கவச உடைகள், 16 ஆயிரம் செயற்கை சுவாச கருவிகள், 21 லட்சம் சோதனை கருவிகள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்துள்ளோம். சரியாக பயன்படுத்த தெரியாததால், தரம் குறித்து சந்தேகம் தெரிவிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X