search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளத்தில் மூழ்கிய கார்கள்
    X
    வெள்ளத்தில் மூழ்கிய கார்கள்

    ஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயல் - 8 பேர் பலி

    ஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயலுக்கு 8 பேர் பலியாகினர். லட்சக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
    டோக்கியோ:

    ஜப்பான் நாட்டை ஹகிபிஸ் புயல் நேற்று தாக்கியது. இதில் தலைநகர் டோக்கியோவின் தென்மேற்கில் உள்ள பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டது.

    மணிக்கு 216 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதுடன் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் சரிந்தன. வீட்டின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன.

    ஹிகிபிஸ் புயலின் எதிரொலியாக கொட்டித் தீர்த்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பல இடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. 

    புயல் தொடர்பான எச்சரிக்கையால் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். மேலும், பல்வேறு நிவாரண முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். ஜப்பான் முழுவதும் சுமார் 2 ஆயிரம் சர்வதேச, உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில், ஹிகிபிஸ் புயலில் சிக்கி 8 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். மேலும் 100 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என மீட்புக்  குழுவினர் தெரிவித்தளனர். 
    Next Story
    ×