search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துருக்கியில் சோகம் - கார் கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 8 பேர் பலி
    X

    துருக்கியில் சோகம் - கார் கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 8 பேர் பலி

    துருக்கி நாட்டில் கார் கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 8 பேர் பரிதாபமாக பலியானது சோகத்தை ஏற்படுத்தியது. #TurkeyCarAccident
    இஸ்தான்புல்:

    துருக்கி நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள தெக்ரிடாக் மாநிலத்தில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென நிலைதடுமாறிய கார் சாலையில் கவிழ்ந்து விழுந்தது.

    இந்த விபத்தில் காரில் இருந்த குழந்தைகள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர்.

    தகவல் அறிந்து மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் அங்கிருந்து 8 உடல்களை மீட்டனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    துருக்கியில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார்  விசாரித்து வருகின்றனர். #TurkeyCarAccident
    Next Story
    ×