search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி விருது - தென் கொரியா அளிக்கிறது
    X

    பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி விருது - தென் கொரியா அளிக்கிறது

    இந்திய, சர்வதேச பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளுக்கு தென் கொரியா நாட்டின் மிக உயரிய சியோல் அமைதி விருதுக்கு பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார். #Modiawarded #SeoulPeacePrize
    சியோல்:

    தென் கொரியா நாடு கடந்த 1990-ம் ஆண்டில் 24-வது ஒலிம்பிக் போட்டிகளை தலைநகர் சியோலில் வெகு சிறப்பாக நடத்தியது.

    இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் பல்வேறு துறைகளில் சிறப்பான சேவையாற்றிய உலக தலைவர்களுக்கு ஆண்டுதோறும் சியோல் அமைதி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அவ்வகையில், 2018-ம் ஆண்டுக்கான விருதுக்கு உலகில் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 1300 நபர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அவற்றில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இப்பரிசுக்கு தேர்வாகியுள்ளார்.



    இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளால் தூய்மையான அரசை உருவாக்கியதற்காகவும் உலக நாடுகளுடன் நட்புறவை பாராட்டி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், உலக நாடுகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்ததற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்படுவதாக சியோல் அமைதி பரிசு குழு தெரிவித்துள்ளது.

    மேலும், சமூகப் பொருளாதார அமைப்பில் மாற்றத்தை உண்டாக்கி பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கு இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு உதவியாக மோடி அரசின் கொள்கைகள் அமைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. #Modiawarded #SeoulPeacePrize
    Next Story
    ×