என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரூ.7 ஆயிரம் கோடிக்கு ஜப்பானிடம் இருந்து 18 புல்லட் ரெயில்களை இந்தியா வாங்குகிறது
Byமாலை மலர்5 Sep 2018 6:42 AM GMT (Updated: 5 Sep 2018 6:42 AM GMT)
ஜப்பானிடம் இருந்து ரூ.7 ஆயிரம் கோடிக்கு 18 புல்லட் ரெயில்களை இந்தியா வாங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #India #Railways #BulletTrain #Japan
டோக்கியோ:
மும்பைக்கும்- அகமதாபாத்துக்கும் இடையே அதிவேக புல்லட் ரெயில் 2022-ம் ஆண்டு இறுதியில் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மணிக்கு 508 கி.மீ. வேகத்தில் இயங்கும் இந்த ரெயில் கட்டுமான பணிகள் ஜப்பான் உதவியுடன் அமல்படுத்தப்பட உள்ளது. அதற்காக ஜப்பானிடம் இருந்து 18 ரெயில்கள் வாங்கப்படுகின்றன.
ஒவ்வொரு ரெயிலிலும் தலா 10 பெட்டிகள் இருக்கும். அவற்றை மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் இயக்க முடியும். இதற்கான டெண்டர் விரைவில் அறிவிக்கப்படும். அதில் ஜப்பான் நிறுவனங்கள் பங்கேற்கிறது.
புல்லட் ரெயில் மூலம் மும்பை- அகமதாபாத்துக்கு தினமும் 18 ஆயிரம் பேர் பயணம் செய்ய முடியும். அதற்கான கட்டணம் ரூ.3 ஆயிரத்துக்கும் கீழ் நிர்ணயிக்கப்படும். விமானத்தில் இருப்பது போன்று புல்லட் ரெயிலிலும் முதல் வகுப்பு வசதி இருக்கும். #India #Railways #BulletTrain #Japan
மும்பைக்கும்- அகமதாபாத்துக்கும் இடையே அதிவேக புல்லட் ரெயில் 2022-ம் ஆண்டு இறுதியில் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மணிக்கு 508 கி.மீ. வேகத்தில் இயங்கும் இந்த ரெயில் கட்டுமான பணிகள் ஜப்பான் உதவியுடன் அமல்படுத்தப்பட உள்ளது. அதற்காக ஜப்பானிடம் இருந்து 18 ரெயில்கள் வாங்கப்படுகின்றன.
ஒவ்வொரு ரெயிலிலும் தலா 10 பெட்டிகள் இருக்கும். அவற்றை மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் இயக்க முடியும். இதற்கான டெண்டர் விரைவில் அறிவிக்கப்படும். அதில் ஜப்பான் நிறுவனங்கள் பங்கேற்கிறது.
புல்லட் ரெயில்கள் ரூ.7 ஆயிரம் கோடிக்கு வாங்கப்படுகிறது. ஜப்பானில் இயங்கும் புல்லட் ரெயில்கள் மிகவும் பாதுகாப்பானவை. எனவே ஜப்பான் உதவியுடன் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
புல்லட் ரெயில் மூலம் மும்பை- அகமதாபாத்துக்கு தினமும் 18 ஆயிரம் பேர் பயணம் செய்ய முடியும். அதற்கான கட்டணம் ரூ.3 ஆயிரத்துக்கும் கீழ் நிர்ணயிக்கப்படும். விமானத்தில் இருப்பது போன்று புல்லட் ரெயிலிலும் முதல் வகுப்பு வசதி இருக்கும். #India #Railways #BulletTrain #Japan
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X