search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோமாலியாவில் அரசு அலுவலகம் மீது கார் குண்டு தாக்குதல் - 3 பேர் பலி
    X

    சோமாலியாவில் அரசு அலுவலகம் மீது கார் குண்டு தாக்குதல் - 3 பேர் பலி

    சோமாலியா நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அரசு அலுவலகம் மீது அல் ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். #Somaliaexplosion #Mogadishuexplosion
    மொகடிஷு:

    சோமாலியா நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஹாவ்லே வாடாக் மாவட்டத்தில் உள்ள அம்மாவட்ட தலைமை நிர்வாக அலுவலகத்தின் மீது இன்று வேகமாக வந்த ஒரு கார் மோதி வெடித்து சிதறியது.

    இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 6 குழந்தைகள் உள்பட 14 பேர் படுகாயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கார் குண்டு வெடித்து சிதறிய வேகத்தில் அருகாமையில் இருந்த ஒரு பள்ளிக்கூட கட்டிடம் இடிந்து தரைமட்டம் ஆனது. ஒரு மசூதியின் மேற்கூரை மற்றும் சில வீடுகள் கடுமையாக சேதமடைந்தன.  #Somaliaexplosion #Mogadishuexplosion
    Next Story
    ×