என் மலர்
செய்திகள்

வங்காளதேச பிரதமருடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு
நேபாளத்தில் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் ஆலோசனை நடத்தினார். #BIMSTEC #Modi #SheikhHasina
காத்மாண்டு:
வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை இலக்காகக் கொண்ட இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். நேபாளம் சென்றடைந்த மோடிக்கு அரசு முறைப்படி வரவேற்பு மற்றும் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்திருந்த வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவுடன் பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் இருநாட்டு உறவுகளின் மேம்பாடு, கலாச்சாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #BIMSTEC #Modi #SheikhHasina
வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை இலக்காகக் கொண்ட இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். நேபாளம் சென்றடைந்த மோடிக்கு அரசு முறைப்படி வரவேற்பு மற்றும் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்திருந்த வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவுடன் பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் இருநாட்டு உறவுகளின் மேம்பாடு, கலாச்சாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #BIMSTEC #Modi #SheikhHasina
Next Story






