என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத் தலைவருக்கு மேலும் ஒரு ஆயுள் தண்டனை- கெய்ரோ கோர்ட் உத்தரவு
By
மாலை மலர்13 Aug 2018 10:57 AM GMT (Updated: 13 Aug 2018 10:57 AM GMT)

எகிப்து நாட்டில் தடை செய்யப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் தலைவரான முஹம்மது படிய்-க்கு மேலும் ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. #Egypt #MuslimBrotherhoodleader #MohammedBadie
கெய்ரோ:
எகிப்து நாட்டில் கடந்த 2013-ம் ஆண்டில் அதிபர் பதவியில் இருந்து ராணுவத்தால் வெளியேற்றப்பட்ட முஹம்மது மோர்சியின் ஆட்சியை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தில் அப்போது அவரது இயக்கத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் தலைநகர் கெய்ரோவில் முகாம்கள் அமைத்து போராட்டம் நடத்தினர்.
அவருக்கு ஆதரவாக முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை சேர்ந்தவர்களும் போராட்டங்களில் குதித்தனர். அவர்களை கலைக்க முயன்ற ராணுவத்தினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
85 வருட காலமாக இயங்கி வரும் இந்த முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை 1954-ம் ஆண்டு ராணுவ அரசு தடை செய்தது. இருந்தும் அவர்கள் அந்த இயக்கத்தை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகவும் பின்னர் அதில் ஒரு பிரிவினர் அதை ஒரு அரசியல் கட்சியாகவும் பதிவு செய்துகொண்டனர்.

இதற்கிடையே, கைது செய்யப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை சேர்ந்த பலர்மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை முடிந்து, சிலருக்கு மரண தண்டனையும், மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை உள்ளிட்ட சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை பெற்றவர்களில் சிலர் தூக்கிலிட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வன்முறையை தூண்டி பல உயிர்கள் பலியாக காரணமாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட முஹம்மது படிய் என்பவருக்கு பல ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும் ஒரு வழக்கில் அவருக்கும் அவரது இயக்கத்தை சேர்ந்த 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கெய்ரோ கிரிமினல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. #Egypt #MuslimBrotherhoodleader #MohammedBadie
எகிப்து நாட்டில் கடந்த 2013-ம் ஆண்டில் அதிபர் பதவியில் இருந்து ராணுவத்தால் வெளியேற்றப்பட்ட முஹம்மது மோர்சியின் ஆட்சியை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தில் அப்போது அவரது இயக்கத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் தலைநகர் கெய்ரோவில் முகாம்கள் அமைத்து போராட்டம் நடத்தினர்.
அவருக்கு ஆதரவாக முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை சேர்ந்தவர்களும் போராட்டங்களில் குதித்தனர். அவர்களை கலைக்க முயன்ற ராணுவத்தினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
85 வருட காலமாக இயங்கி வரும் இந்த முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை 1954-ம் ஆண்டு ராணுவ அரசு தடை செய்தது. இருந்தும் அவர்கள் அந்த இயக்கத்தை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகவும் பின்னர் அதில் ஒரு பிரிவினர் அதை ஒரு அரசியல் கட்சியாகவும் பதிவு செய்துகொண்டனர்.
மோர்சிக்கு ஆதரவாக போராடிய சகோதரத்துவ அமைப்பை தீவிரவாத அமைப்பாக எகிப்தின் தற்காலிக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பிறகு சகோதரத்துவ கட்சியை சேர்ந்தவர்கள் நாடு முழுவதும் தீவிரமான வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வன்முறையை தூண்டி பல உயிர்கள் பலியாக காரணமாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட முஹம்மது படிய் என்பவருக்கு பல ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும் ஒரு வழக்கில் அவருக்கும் அவரது இயக்கத்தை சேர்ந்த 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கெய்ரோ கிரிமினல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. #Egypt #MuslimBrotherhoodleader #MohammedBadie
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
