search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோர்டானில் போலீசார் நடத்திய திடீர் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் பலி
    X

    ஜோர்டானில் போலீசார் நடத்திய திடீர் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் பலி

    ஜோர்டான் தலைநகர் அம்மானில் போலீசார் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.
    அம்மான்:

    மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்று ஜோர்டான். இதன் தலைநகர் அம்மான். இங்கு கடந்த வெள்ளிக்கிழமை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது பயங்கரவாதிகள் நாட்டு வெடிகுண்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு போலீசார் பலியானார்.

    இதையடுத்து, போலீசார் அம்மானில் உள்ள சால்ட் நகரில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கருதி, அங்கு தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் பரிதாபமாக பலியாகினர். தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×