search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நவாஸ் ஷரிப் மீதான இதர ஊழல் வழக்குகளை சிறையில் வைத்தே விசாரிக்க முடிவு
    X

    நவாஸ் ஷரிப் மீதான இதர ஊழல் வழக்குகளை சிறையில் வைத்தே விசாரிக்க முடிவு

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்புக்கு எதிரான மற்ற ஊழல் வழக்குகளை அவர் அடைக்கப்பட்டுள்ள அடியாலா சிறைக்குள் வைத்தே விசாரிக்க அந்நாட்டின் பொறுப்புடைமை நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. #NawasSharif #Pakistan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோர் மீது சட்டவிரோதமாக சொத்து குவித்ததாக 3 வழக்குகள் தொடரப்பட்டன. அதில் அவென்பீல்டு வழக்கில் நவாஸ் ஷரிப் அவரது மகள் மரியம் நவாஸ், மற்றும் மருமகன் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று இரவு லண்டனில இருந்து பாகிஸ்தான் திரும்பிய நவாஸ் ஷரிப் மற்றும் மரியம்  நவாஸ் ஆகியோர் லாகூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.



    நவாஸ் ஷரிப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோர் அடியாலா சிறையில் ‘பி’ வகுப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அஜிசியா இரும்பு ஆலை ஊழல் வழக்கு உள்ளிட்ட வழக்குகள் நவாஸ் ஷரிப் மீது நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை சிறைக்குள் வைத்தே விசாரிக்க பொறுப்புடைமை நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

    இந்நிலையில், அவென்பீல்டு வழக்கில் நவாஸ் ஷரிப், மரியம் நவாஸ் மற்றும் மருமகன் சப்தார் ஆகியோருக்கு  வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து திங்களன்று மேல்முறையீடு செய்ய இருப்பதாக அவரது வழக்கறிஞர் கவாஜா ஹாரிஸ் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. #NawasSharif #Pakistan
    Next Story
    ×