search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினர் உடனான துப்பாக்கிச் சண்டையில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
    X

    பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினர் உடனான துப்பாக்கிச் சண்டையில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பாதுகாப்பு படையினர் உடனான துப்பாக்கிச் சண்டையில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #PakistanGunbattle

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ஒரு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து, பயங்கரவாதிகளை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். 

    பாதுகாப்பு படையினர் வருவதை அறிந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் ஆறு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 3 பேர் தப்பியோடி விட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    கொல்லப்பட்ட அனைவருக்கும் கடந்த ஆண்டு பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி அலுவலகம் அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #PakistanGunbattle #tamilnews 
    Next Story
    ×