என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட ஐ.நா சபை உறுப்பினர் - அவரது மகன் விடுவிப்பு
Byமாலை மலர்24 May 2018 10:37 AM GMT
மர்ம நபர்களால் ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட ஐ.நா சபை உறுப்பினர் மற்றும் அவரது மகன் இருவரும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். #UnitedNations
காபூல் :
கடந்த ஜனவரி மாதம் 22-ம் தேதி ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஐக்கிய நாடுகள் சபையின் பெண் உறுப்பினர் மற்றும் அவரது மகன் காரில் சென்றுகொண்டிருந்த போது அவர்களை வழிமறித்து அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். கடத்தல் சம்பவத்தின் போது கார் ஓட்டுனர் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் கடந்த மார்ச் மாதம் மீட்கப்பட்டது.
இந்நிலையில் கடத்தி செல்லப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பெண் உறுப்பினர் மற்றும் அவரது மகன் இருவரும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து பேசிய ஆப்கானிஸ்தான் நாட்டின் ஐக்கிய நாடுகள் சபையின் செயல் தலைவர் இங்கிரிட் ஹெய்டன், இந்த கடத்தல் சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். கடத்தலின் போது எங்களில் ஒருவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் பணத்திற்காக நடக்கும் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த சில வருடங்களில் வெளிநாட்டினர் பலர் அங்கு கடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #UnitedNations
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X