என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
சாக்லேட் ஆலையில் வெடிவிபத்து: இருவர் பலி- 5 பேர் மாயம்
Byமாலை மலர்25 March 2023 7:38 PM GMT (Updated: 25 March 2023 9:14 PM GMT)
- விபத்தில் ஆலையின் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்தது, மற்றொன்று சேதமடைந்தது. அருகில் இருக்கும் சில வீடுகள் வெடிவிபத்தால் அதிர்ந்தன.
- வெடிவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்.
பென்சில்வேனியாவில் வெஸ்ட் ரெடிங் பகுதியில் உள்ள சாக்லேட் தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் ஆர்எம் பால்மர் சாக்லெட் ஆலையில் இந்த வெடி விபத்து நிகழ்ந்தது.
அதில் ஆலையின் ஒரு கட்டிடம் இடிந்து தரைமட்டமாகி உள்ளது. மற்றொ கட்டிடம் சேதமடைந்தது. அருகில் இருக்கும் சில வீடுகள் வெடி விபத்தால் அதிர்ந்தன.
இந்த வெடி விபத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர் என்றும் 5 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் தற்போது இடிபாடுகளுக்குள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வெடிவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறைத் தலைவர் வெய்ன் ஹோல்பென் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X