search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    உக்ரைன் ஏவுகணை தாக்குதல்: ரஷியாவில் குழந்தைகள் உள்பட 18 பேர் பலி
    X

    உக்ரைன் ஏவுகணை தாக்குதல்: ரஷியாவில் குழந்தைகள் உள்பட 18 பேர் பலி

    • ரஷிய ராணுவம் சமீபகாலமாக உக்ரைன் மீது தீவிரமாக வான் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
    • பெரும்பாலான ஏவுகணைகள் உக்ரைன் பகுதியை தாக்குவதால் அதிக அளவில் சேதம் ஏற்படுகிறது.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டுள்ள ரஷியா, சமீபகாலமாக தீவிரமாக வான் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. பெரும்பாலான ஏவுகணைகள் உக்ரைன் பகுதியை தாக்குவதால் அதிக அளவில் சேதம் ஏற்படுகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் படைகள் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன.

    இதற்கிடையே சமீபத்தில் ரஷியா ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலின்போது 122 ஏவுகணைகள் மற்றும் 36 டிரோன்கள் ஏவப்பட்டன. இதில் பொதுமக்கள் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கீவ் உள்பட 6 நகரங்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், ரஷியாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைன் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ரஷியாவின் பெல்கரோட் நகரில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 18 பேர் பலியாகினர் என ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×