search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அந்த அம்சத்தை நீக்கிவிட்டு இந்த அம்சத்தை வழங்கும் சாம்சங்
    X

    அந்த அம்சத்தை நீக்கிவிட்டு இந்த அம்சத்தை வழங்கும் சாம்சங்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் ஐரிஸ் ஸ்கேனர் நீக்கப்படுவதாகவும், இந்த அம்சத்துக்கு மாற்றாக அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    சாம்சங் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் அறிமுகமாக சில மாதங்கள் எஞ்சியிருக்கும் நிலையில், ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வலம் வரத்துவங்கியுள்ளன.

    2019-ம் ஆண்டில் சாம்சங் நிறுவனத்தின் முதல் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக அறிமுகமாக இருக்கும் கேலக்ஸி எஸ்10 மாடலில் ஐரிஸ் ஸ்கேனரை நீக்க சாம்சங் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதன்படி தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் கேலக்ஸி எஸ்10 இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட சாம்சங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தவிர கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் 3D முக அங்கீகார தொழில்நுட்பம் சேர்க்கப்படுவதாக கூறப்படுகிறது.



    இதற்காக சாம்சங் நிறுவனம் இஸ்ரேலை சேர்ந்த மான்டிஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இரு நிறுவனங்கள் இணைந்து ஐபோன் X மாடலில் வழங்கப்பட்டதை போன்ற முக அங்கீகார வசதியை உருவாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த திட்டம் வெற்றிபெறும் பட்சத்தில் சாம்சங் தனது எஸ்10 மாடலில் ஐரிஸ் ஸ்கேனரை நீக்கிவிட்டு, 3D முக அங்கீகார தொழில்நுட்பத்தை வழங்கும் என கூறப்படுகிறது. கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் வழங்குவதற்கான மாதிரி பாகங்களை உதிரிபாக நிறுவனங்களிடம் சாம்சங் முன்பதிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இன்-டிஸ்ப்ளே சென்சார் மற்றும் 3D முக அங்கீகார தொழில்நுட்பங்களை புதிய ஸ்மார்ட்போனில் வழங்கும் பட்சத்தில் சாம்சங் நிச்சயம் ஐரிஸ் ஸ்கேனரை நீக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தொழில்நுட்பங்களை சேர்க்கும் பட்சத்தில் புதிய ஸ்மார்ட்போனில் ஏ.ஆர். எமோஜி அம்சம் இடம்பெறலாம்.
    Next Story
    ×