என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மோன்தா புயலால் சென்னையில் இன்று கனமழை பெய்யுமா? - பிரதீப் ஜான் விளக்கம்
- இன்று அதிகாலை 2.30 மணியளவில் மோன்தா புயல் உருவானது
- மோன்தா புயல் தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திராவில் கரையை கடக்கவுள்ளது.
வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு தாய்லாந்து நாடு பரிந்துரைத்த மோன்தா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மோன்தா புயல் நாளை மாலை அல்லது இரவில் தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திராவின் மச்சிலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், மோன்தா புயலால் சென்னையின் இன்று மிதமான மழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மோன்தா புயல் சென்னைக்கும் மிகவும் குளிரான வானிலையைக் கொண்டுவரும். ஆனால் இந்த புயலால் சென்னையில் மிக கனமழை பெய்யாது.
வட சென்னையில் 50-70 மிமீ வரை மழை பெய்யும். தென் சென்னையில் 10-50 மிமீ மழை பெய்யும்.
ஆந்திராவுக்கு அருகில் உள்ள கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் புலிகாட் போன்ற பகுதிகளில் மட்டுமே கனமழை பெய்யும். வட சென்னையில் மட்டும் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
இன்று காலை தொடங்கி நாள் முழுவதும் லேசான தீவிரத்துடனும் அவ்வப்போது கன மழை பெய்யும். நாளை காலைக்குள் மழை நின்றுவிடும்.






