என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி கேட்டோம்.. ஆனால்..!- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து இருந்தோம்.
- மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது.
மத்திய பட்ஜெட் குறித்த கேள்விக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
தென்காசி, பெரம்பலூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர்,
ராணிப்பேட்டை, மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து இருந்தோம்.
இந்த மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு இடம் பெறும் என எதிர்பார்த்தோம்.
அறிவிப்பு எதுவும் இடம்பெறவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story






