என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம்- வருண்குமார் ஐ.பி.எஸ்.
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம்- வருண்குமார் ஐ.பி.எஸ்.

    • மாநாட்டில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றி வரும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பங்கேற்றனர்.
    • இணையதள குற்றங்களை கண்காணிப்பது, தடுப்பது குறித்து ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்தியில் திருச்சி எஸ்.பி.வருண்குமார் ஐ.பி.எஸ். ஆதாரங்களோடு விளக்கி பேசினார்.

    சண்டிகர் மாநிலத்தில் 5-வது தேசிய ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றி வரும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பங்கேற்றனர்.

    மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஐ.பி.எஸ். இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்.

    அப்போது இணையதள குற்றங்களை கண்காணிப்பது, தடுப்பது குறித்து ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்தியில் திருச்சி எஸ்.பி.வருண்குமார் ஐ.பி.எஸ். ஆதாரங்களோடு விளக்கி பேசினார்.

    அவர் பேசுகையில், சைபர் குற்றங்களால் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக உள்ள தானும் தன்னுடைய குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டதாகவும் அதற்கு காரணம் நாம் தமிழர் கட்சி தான். நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு பிரிவினைவாத இயக்கம் என்றார்.


    Next Story
    ×