என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பேரளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி விபத்து- 3 வாலிபர்கள் பலி
    X

    பேரளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி விபத்து- 3 வாலிபர்கள் பலி

    • மோட்டார் சைக்கிளிலில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
    • வேன் டிரைவரை கைது செய்த போலீசார் வேனை பறிமுதல் செய்துள்ளனர்.

    பேரளம்:

    திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள கடகக்குடி, ஆட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் வினோத் (வயது 30), பசுபதி (28), இளையரசன் (26).

    இவர்கள் 3 பேரும் கூலிதொழிலாளர்கள். இந்நிலையில் நேற்று 3 பேரும் வேலைக்கு சென்று விட்டு ஒரே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். அவர்கள் பேரளத்திலிருந்து பூந்தோட்டம் நோக்கி திருவாரூர் - மயிலாடுதுறை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    பேரளம் அருகே இஞ்சிகுடி கடைத்தெருவில் என்ற இடத்தில் சென்றபோது சிவகங்கையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளிலில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் பேரளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் சிவகங்கை பகுதியைச் சேர்ந்த அசோக்பாபு என்பவரை கைது செய்து வேனை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மோட்டார் சைக்கிள் விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×