என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் நாளை (17.06.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- மூவேந்தர் சாலை, சவுமியா நகர், கஜேந்திரன் நகர் ஒரு பகுதி.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (17.06.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
சிட்லபாக்கம்: சிட்லபாக்கம்- பஜனை கோவில் தெரு, மெய்கை விநாயகர் கோவில் தெரு, நவின் ஸ்டார்வுட்ஸ், காசாகிராண்ட் ஜெனித், சங்கராபுரம், ஏடிபி அவென்யூ, என்எஸ்கே தெரு.
பள்ளிக்கரணை: பள்ளிக்கரணை- கிருஷ்ணா நகர், ராஜலட்சுமி நகர், வள்ளல் பாரி நகர், ஜீவா நகர், கண்ணபிரான் கோவில் தெரு, துலுக்காத்தமன் கோவில் தெரு.
மேடவாக்கம்: மேடவாக்கம்- அம்பேத்கர் சாலை, மூவேந்தர் சாலை, சவுமியா நகர், கஜேந்திரன் நகர் ஒரு பகுதி, வீரபத்திரன் நகர், பாலாஜி நகர், ஜிக்மா பள்ளிப் பகுதி.
அம்பத்தூர் ரியல் எஸ்டேட், அய்யப்பாக்கம், ஆதிபேட்டை 3-வது மெயின் ரோடு, வானகரம் சாலை, எம்டிஎச் ரோடு, டிபி 67 முதல் 94, பெரியார் காலணி, பிரின்ஸ் அபார்ட்மெண்ட், பிகேஎம் ரோடு, கல்யாணி எஸ்டேட், அலக் ரெட்டி குடியிருப்பு, குப்பம், சங்கர் ஷெலிங், நடேசன் நகர், 14-வது தெரு, வள்ளலார் தெரு.






