என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

Fair Delimitation வடக்கு மக்கள் தொகை உயர்வை அரசியல் ஆயுதமாக பயன்படுத்த முடியாது: மு.க. ஸ்டாலின்
- தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை கூடாது.
- இது கூட்டாட்சி நியாயத்தை குறைத்து மதிப்பீடு செய்வதற்கு உட்படுத்துவதாகும்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுவரையறை நியாயமான முறையில் செய்யப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.. தற்போது நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தென்மாநிலங்களுக்கான பாராளுமன்ற தொகுதிகள் கணிசமாக குறையும் என்பது குற்றச்சாட்டு.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவியில் கூறியிருப்பதாவது:-
தெற்கை (தென்இந்திய மாநிலங்கள்) அமைதியாக்குவதற்காக வடக்கு (வடமாநிலங்கள்) மக்கள் தொகை அதிகரிப்பை அரசியல் ஆயுதமாக பயன்படுத்த முடியாது.
தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை கூடாது. இது கூட்டாட்சி நியாயத்தை குறைத்து மதிப்பீடு செய்வதற்கு உட்படுத்துவதாகும். நாங்கள் நியாயமான தொகுதி மறுவரையறையை கோருகிறோம்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Next Story






