என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

துடியலூர் பகுதியில் 9-ந்தேதி மின்தடை
- துடியலூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- மின்வினியோகம் பெறும் பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை அமலில் இருக்கும்.
கோவை:
துடியலூர் துணை மின்நிலையத்தில் வருகிற 9-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே அந்த மின்வழித்தடத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
துடியலூர் பகுதியில் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் வருமாறு:-
கு.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணா நகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி. நகர், என்.ஜி.ஜி.ஓ. காலனி, பழனிக்கவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம், கே.என்.ஜி.புதூர், வேணுகோபால் மருத்துவமனையின் ஒரு பகுதி.
Next Story






