என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பா.ம.க.வில் மோதல்: சவுமியா அன்புமணி கருத்து சொல்ல மறுப்பு
    X

    பா.ம.க.வில் மோதல்: சவுமியா அன்புமணி கருத்து சொல்ல மறுப்பு

    • அன்புமணியின் கருத்தை கேட்பதற்காக கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள அன்புமணியின் வீட்டில் நிருபர்கள் குவிந்துள்ளனர்.
    • காரில் வெளியே புறப்பட்ட அன்புமணியின் மனைவி சவுமியாவிடம், பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள மோதல் பற்றி நிருபர்கள் கருத்து கேட்டனர்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் யார்? என்பது தொடர்பாக அந்த கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும், தலைவர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பா.ம.க. தலைவர் பதவியை நானே எடுத்துக் கொள்கிறேன். அன்புமணி செயல் தலைவராக இருப்பார் என்று ராமதாஸ் தெரிவித்திருந்தார்.

    இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், பா.ம.க. தலைவராக நான் நீடிக்கிறேன் என்றும் கூறியுள்ளார். இந்த மோதல் தொடர்பாக அன்புமணியின் கருத்தை கேட்பதற்காக கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள அன்புமணியின் வீட்டில் நிருபர்கள் குவிந்துள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலையில் வீட்டில் இருந்து காரில் வெளியே புறப்பட்ட அன்புமணியின் மனைவி சவுமியாவிடம், பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள மோதல் பற்றி நிருபர்கள் கருத்து கேட்டனர். இதற்கு அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.

    Next Story
    ×