என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு
    X

    கவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு

    • திருப்பூரில் கொங்கு கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
    • போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் செருப்பு வீசியது தெரிய வந்தது.

    திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த கவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திருப்பூரில் கொங்கு கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கவிஞர் வைரமுத்து வந்தார். அப்போது கூட்டத்தில் கவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    செருப்பு கவிஞர் வைரமுத்து மீது படாமல் கூட்டத்தை தாண்டி சென்று விழுந்தது. அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் செருப்பு வீசியது தெரிய வந்தது.

    செருப்பு வீசிய பெண் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Next Story
    ×