என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மதுரையை தார்ப்பாய் போட்டா மூட முடியும்? - அதிகாரிகளை கடிந்து கொண்ட செல்லூர் ராஜூ
    X

    மதுரையை தார்ப்பாய் போட்டா மூட முடியும்? - அதிகாரிகளை கடிந்து கொண்ட செல்லூர் ராஜூ

    • 20 நாட்களாக சாக்கடை நீர் நிரம்பி இருக்கிறது.
    • பொதுப்பணி துறைக்கு ரூ.11 கோடி ஒதுக்கும் முதலமைச்சர் ஏன் முன்பே செய்யவில்லை.

    மதுரை:

    மதுரை மாநகராட்சி செல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை ஆய்வு மேற்கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ஏன் பணிகள் மந்தமாக நடைபெறுகிறது என்று அதிகாரிகளை கடிந்து கொண்டார்.

    இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

    நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சொல்லி இருக்கிறது என்றால் உயர்நீதிமன்றம் முல்லை நகருக்கு மட்டும் சொல்லவில்லை. மதுரையில் இருக்கும் எல்லா இடங்களுக்கும் தான் சொல்லி இருக்கிறது.

    அப்படி செய்ய வேண்டும் என்றால் முதலில் உயர்நீதிமன்றத்தை தான் அகற்ற வேண்டும். அதுவும் நீர்நிலையில் தான் இருக்கிறது.

    20 நாட்களாக சாக்கடை நீர் நிரம்பி இருக்கிறது. ஏன் அமைச்சர்கள் வந்து பார்க்கக்கூடாதா?

    இந்த பகுதியில் தொற்று நோய் பரவி வருகிறது. எல்லோரும் எளிய மக்கள்.

    இப்போது பொதுப்பணி துறைக்கு ரூ.11 கோடி ஒதுக்கும் முதலமைச்சர் ஏன் முன்பே செய்யவில்லை.

    முதல்வர் ஆய்வு கூட்டம் நடத்தி இருப்பார். மதுரையில் அதிகம் பாதிக்கப்படக்கூடிய இடங்களை சொல்லி இருப்பார்கள். அதற்காக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இந்த அரசாங்கம் வெறும் பெயரளவுக்குதான். கூட்டணி பலம் இருக்கிறது.

    என்ன கூட்டணியாக இருந்தாலும் இந்த அரசாங்கத்தின் மீது உள்ள வெறுப்புணர்ச்சி காரணமாக இந்த கூட்டணியில் சேரும் கட்சிகள் எல்லாமே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்போகிறார்கள். இதுதான் நடக்கப்போகிறது என்று கூறினார்.

    Next Story
    ×