என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    செஞ்சி அருகே வனவிலங்கு சரணாலயம் அமைக்க அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்- ராமதாஸ்
    X

    செஞ்சி அருகே வனவிலங்கு சரணாலயம் அமைக்க அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்- ராமதாஸ்

    • செஞ்சி அருகே பாக்கம்-கெங்கவரம் காப்புக்காடு 1897-ம் ஆண்டு காப்புக்காடாக அறிவிக்கப்பட்டது.
    • அழிந்துவரும் வனவிலங்குகளையும், இயற்கையையும் பாதுகாக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பாக்கம்-கெங்கவரம் காப்புக்காடு 1897-ம் ஆண்டு காப்புக்காடாக அறிவிக்கப்பட்டது. இக்காடு கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகும். 7 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவு கொண்ட இக்காட்டில் சிறுத்தை, கரடி, அரியவகை சிலந்திகள், அழிந்துவரும் நிலையில் உள்ள பாம்புகள், பெரிய அணில், லங்கூர் குரங்குகள், எறும்பு திண்ணி, தங்கப்பல்லி, புல்புல் ரேசர் ஸ்னேக் என்கிற அரியவகை பாம்பு, 15 குடும்பங்களைச் சேர்ந்த 56 வகை பாம்புகள், தவளைகள், தேரைகள் உள்ளது என்று உள்நாட்டு பல்லுயிர் பாதுகாப்பு அமைப்பு கண்டறிந்துள்ளது.

    எனவே நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து பேசி முடிவெடுத்து வருகின்ற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பாக்கம்-கெங்கவரம் பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும் என அறிவித்து அழிந்துவரும் வனவிலங்குகளையும், இயற்கையையும் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

    Next Story
    ×