என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தலைமைக்கும், தலைவருக்கும் கட்டுபடாமல் யார் எந்த யாத்திரை போனாலும் பயனில்லை- ராமதாஸ்
    X

    தலைமைக்கும், தலைவருக்கும் கட்டுபடாமல் யார் எந்த யாத்திரை போனாலும் பயனில்லை- ராமதாஸ்

    • மத்திய அரசு மீனவர்களை மீட்டு மீனவ சமூதாயத்திற்கு பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும்.
    • பாட்டாளி மக்கள் கட்சிக்கான வேரும், வியர்வையும் தைலாபுரத்தில் மட்டும் தான் உள்ளது.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் இல்லத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழர்கள் தொடர்ந்து கைது செய்வது தொடர்கதையாகி இருந்து வருகிறது. இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் வலை மீன்களை கொள்ளை அடித்து செல்வதும் வாடிக்கையாக உள்ளது.

    கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இலங்கை கடற்படையினரால் 40-க்கும் மேற்பட்ட மீன்வர்கள் கைது செய்யபட்டு விசைபடகுகள் பறிமுதல் செய்யபட்டுள்ளன. மத்திய அரசு மீனவர்களை மீட்டு மீனவ சமூதாயத்திற்கு பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும்.

    வேளான்மை துறை, தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர்களை தனித்தனியாக சந்தித்து வேளாண் வளர்ச்சி குறித்து விவசாயிகள் அறிந்து கொள்வது முறையல்ல. உழவர் 2.0 என்ற திட்டத்தினை கொண்டுவந்ததோடு சரி, திட்டம் செயல்படுத்தவில்லை. விவசாயிகளுக்கும், வேளாண்மை உதவி அலுவலர்களுக்கு நேரடி தொடர்பு இருந்தால் மட்டுமே சிறப்பாக அமையும். தலைநகர் சென்னையில் எத்தனை நூலகங்கள் இருந்தாலும் கன்னிமாரா தேசிய நூலகம் தனிபெருமை கொண்டது.

    சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராடி வருகவதால் உரிய தீர்வை அளிக்க வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 தேர்தல் அறிக்கையில் 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கபடும் என தெரிவித்ததை நிறைவேற்றி தர வேண்டும்.

    பாட்டாளி மக்கள் கட்சிக்கான வேரும், வியர்வையும் தைலாபுரத்தில் மட்டும் தான் உள்ளது. ஒரே தலைமை தான் ஒரே தலைவர் தான். தலைமைக்கும், தலைவருக்கும் கட்டுபடாமல் யார் எந்த யாத்திரை போனாலும் ஒரு துளியும் பயனில்லை. தொண்டர்களும் ஏற்க மாட்டார்கள். பொதுமக்களும் ஏற்க மாட்டார்கள். காவல் துறை தலைமைக்கும், உள்துறை தலைமைக்கும் எல்லாம் தெரியும் முறைப்படி புகார் அளித்திருக்கிறோம். பா.ம.க. தலைவர் என்ற பெயரோடு அடையாளத்தோடு யார் என்ன சொன்னாலும் அதை கேட்காதீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×