என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திட்டமிட்டபடி நாளை சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும்- ராமதாஸ் அறிவிப்பு
    X

    திட்டமிட்டபடி நாளை சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும்- ராமதாஸ் அறிவிப்பு

    • பொதுக்குழு ரத்து செய்யப்படுவதாக சிலர் வதந்தி பரப்புவதாக செய்தி வருகிறது.
    • புதுச்சேரி சங்கமித்ரா அரங்கில் திட்டமிட்டபடி பொதுக்குழு நடப்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.

    பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் நாளை 17.08.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு பாண்டிச்சேரி அருகில் உள்ள சங்கமித்ரா அரங்கில் திட்டமிட்டபடி நடக்கும். இதில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பொதுக்குழு ரத்து செய்யப்படுவதாக சில விஷமிகள் வதந்தி பரப்புவதாக செய்தி வருகிறது. இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். எனது தலைமையில் நாளை 17.08.2025 ஞாயிற்றுக்கிழமை பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை.

    பொதுக்குழுவில் கலந்துகொள்ள வேண்டியவர்கள் அனைவரும் அவசியம் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×